கண்டன அறிக்கை | NTK ITPW

          உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்னுமிடத்தில் 19 வயதுடைய சகோதரிக்கு நடந்திருக்கும் கொடுமை நம் மனசாட்சியை உலுக்குகிறது.‘பேடி பசாவ் பேடி பத்தா ’ – பெண் குழந்தைகளைக் காப்போம் என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்தில் இந்த அவலம் நடந்திருக்கிறது.குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காத மாநில அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, இறுதிச்சடங்கை அப்பெண்ணின் குடும்பத்திற்குக் கூட அறிவிக்காமல் நடத்தியிருப்பது அரச பயங்கரவாதம்.

          பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையும் கொடுமைகளும் தொடர்கதையாக இருப்பது, நிர்பயா வழக்கிலிருந்து அரசு எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டில் நடந்த நிர்பயா படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கே இந்த வருடம்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.எனில் , இவர்களுக்கு தண்டனை கிடைக்குமா ? அந்த தண்டனைதான் இதற்கு தீர்வாகுமா? இதற்கு முடிவு எப்போது ?

          பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் மதிப்பு அளிக்காத சமூகம் நாகரிகம் அடைந்த சமூகமாக ஏற்றுக் கொள்ளப்படவே முடியாது.உலக அரங்கில் வல்லரசாகத் துடிக்கும் நம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமல் எப்படி அடையப் போகிறது?ஆசிபா வழக்கில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருவது தடைபடும் எனக் கூறிய அரசு, இப்போதும் அதைத் தான் கூறப்போகிறதா?

          நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பணியாளர் பிரிவின் சார்பாக இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதனை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் காணாமல், இக்கொடுமை இனியும் நிகழாமல் இருக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
IT Professionals Wing, Naam Tamilar Katchi.
#ITPW_NTK

Plea for the Welfare of the IT Professionals!

  • It is well known that people around the world are affected in various ways due to COVID-19 crisis. All the companies have been hit by the paralysis of the usual businesses, especially small and marginal enterprises (SME). In such times, workers are untoldly distressed by the loss of jobs, and the IT sector is no exception.
  • In this context, it is condemnable that some of the major IT companies are involved in illegal layoffs; for example, Cognizant alone is laying down several thousand employees, which is shocking!
  • All major companies in the IT sector have been making continuous profits and higher revenue, now the revenue and profit growth have been slowed in the last two quarters only due to the recession caused by the pandemic.
  • Taking advantage of this situation, it is illegal for the organizations in the IT sector to engage in layoffs and betrayal of workers. The Naam Tamilar Katchi’s IT Professionals Wing strongly condemns this action.
  • Companies are coping with the slack situation by slackening of existing “variable pay” and “bonus” payouts to reduce employee pay costs in times of decline in the income and cope with the adverse situations in the industry. It also suspends the salary hike and promotion for the employees, moreover temporarily suspends the hiring of new workers. This will help the large companies to cope with the short-term recession. Furthermore, as always, the companies undertake measures to reduce the number of employees to make more profits, which is a strongly condemnable and unlawful act.
  • Companies are engaged in dismissing workers illegally by ignoring labor-welfare laws by pointing out false reasons that employees have no project to work on and the performance of the employee is not good and so on. Employees are forced to write to their managers and HR managers that they will resign themselves, and if they do not, the companies threatens them that it will terminate and thereby their future will be spoiled. This sort of atrocity by the companies has been a mental lynching of employees and adversely affects the future of the employees and their family members.
  • Therefore, On behalf of the Naam Tamilar Katchi’s IT Professionals Wing, we request the Tamil Nadu Government and the Union Government should immediately identify, on their own, the companies who were involved in the illegal layoffs, stop providing the tax and other concessions, take legal action, and make the companies reemploy their personnel with the remuneration they have lost.
For the Welfare of Professionals,
IT Professionals Wing,
Naam Tamilar Katchi.
#ITPW_NTK

தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் நலன் காக்க, வேண்டுகோள் !

  • கொரோனா நோய் தொற்றினால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தொழில்கள் முடங்கி உள்ளமையால் அனைத்து நிறுவனங்களும் பாதிப்பினை சந்தித்துள்ளது, குறிப்பாக சிறு குறு நிறுவனங்கள் மிக அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதுபோன்ற காலகட்டங்களில் தொழிலாளர்கள் வேலை இழப்பினால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகின்றனர், இதில் தகவல் தொழில்நுட்பத் துறையும் விதிவிலக்கல்ல.
  • இந்தச் சூழலில் குறிப்பிட்ட சில பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டவிரோத ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது, உதாரணத்திற்கு காக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் மட்டும் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றது என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அனைத்து பெரு நிறுவனங்களும் இதுவரை தொடர்ச்சியாக லாபம் ஈட்டிக் கொண்டு வருவாயினை அதிகரித்துக் கொண்டே இருந்தது, தற்போது நோய் தொற்றினால் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக கடந்த இரண்டு காலாண்டுகளில் மட்டுமே சிறிது வருவாய் மற்றும் இலாப வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
  • இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது மற்றும் தொழிலாளர்களுக்கு இழைக்கும் துரோகச் செயலாகும். இந்த செயலை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
  • நிறுவனங்களின் வருவாய் குறையும் நேரங்களில் ஊழியர்களின் ஊதிய செலவுகளை குறைத்துக்கொள்ள ஏற்கனவே இருக்கும் “மாறுவிகித ஊதியம் (Variable Pay)” மற்றும் “ஊக்க ஊதியம் (Bonus)” ஆகியவைகள் குறைக்கப்பட்டோ அல்லது வழங்கப்படாமலோ நிறுவனங்கள் தொய்வான சூழ்நிலைகளை சமாளித்து வருகின்றது, ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் மொத்த ஊதியத்தில் இருந்து இது போன்று “மாறுவிகித ஊதியம்” மற்றும் “ஊக்க ஊதியம்” என்று பிரித்து வைத்திருப்பதே தொழிலில் நடக்கும் பாதகமான சூழல்களை சமாளிப்பதற்காகவே. மேலும் புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றது. இதன் மூலம் குறுகிய காலங்களில் நடைபெறும் மந்த நிலையை மிக எளிதாக பெரிய நிறுவனங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். இதற்கு மேலும் நிறுவனங்கள் எப்போதும்போல் அதிகப்படியான லாபம் ஈட்ட ஆட்குறைப்பு செய்வது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் சட்டத்திற்கு புறம்பானதுமாகும்.
  • நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய ஊழியருக்கு பணி (Project) இல்லை, ஊழியரின் திறன் (Performance) சரியில்லை, என்று போலியான காரணங்கள் கூறி தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் புறந்தள்ளி சட்டவிரோதமாக பணியிலிருந்து வெளியேற்றும் வேலையை செய்துவருகிறது. ஊழியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் கொடுக்கும்படி அவர்களின் மேலாளர்களாளும் மற்றும் மனிதவள நிர்வாகிகளாளும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர், அப்படி செய்யவில்லை எனில் ‘பணிநீக்கம் செய்து விட்டோம்’ என்று கடிதம் கொடுப்போம் அதனால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் மிரட்டப்படுகின்றனர். நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த கொடுஞ்செயல் ஊழியர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கி ஊழியர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது.
  • ஆகவே *தமிழக அரசும், ஒன்றிய அரசும்* இதுபோன்று சட்டவிரோதமாக ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களை சுயமாக கண்டறிந்து அவர்களுக்கு கொடுக்கப்படும் வரி மற்றும் இதர சலுகைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் அந்த வேலையை இழந்த ஊதியத்துடன் பெற்று தரவேண்டும் என்று *தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை, நாம் தமிழர் கட்சி* சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர் நலன் காக்க,
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
IT Professionals Wing, Naam Tamilar Katchi.
#ITPW_NTK

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

====================================

இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், எச்.சி.எல் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது இலாப நோக்கிற்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களை விருப்ப ஓய்வு எனும் பெயரிலும், இன்னபிற வழிகளிலும் திடீரென கட்டாய பணி நீக்கம் செய்யும் முடிவை நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு புறம் அதிக எண்ணிகையில் புதிய ஊழியர்களை, குறைவான அல்லது ஆரம்ப கட்ட ஊதியத்திற்கு வேலைக்கு எடுத்துக்கொண்டே மறுபுறம் அனுபவமிக்க, இடைநிலை ஊழியர்களை திடீரென அவ்வப்போது இவ்வாறு பணி நீக்கம் செய்து செலவைக் குறைப்பதன் மூலம் தங்களது இலாபத்தை குறிப்பிட்ட காலாண்டிற்கு அதிகரித்துக் காட்டுவதை இத்தகைய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிறுவனங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான, சுயநல நோக்கிற்கு யாரும் பலிகடா ஆகாமலிருக்க, இதுவரை இதனைக் கண்டும் காணாமலிருக்கும் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் நலன், உரிமை சார்ந்த இந்த பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்து பணிபுரியும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுமாறும் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்வாகங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டல்களுக்கு எந்த வகையிலும் அடிபணியாது சட்டப்படி தீர்வுகாண, தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டிட நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் அங்கமான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையையோ அல்லது இதற்காக தொடர்ந்து போராடி வரும் சக தொழிற்சங்கங்களான FITE, UNITE, NDLF-IT போன்றவற்றின் நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ளவும்.

தொழிலாளர்கள் ஒன்றுபடும் வரை தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது!

ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!

மின்னஞ்சல் : [email protected]

#Voice4LaborLaws @ITEWNTKAgainstLayoff

தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை
நாம் தமிழர் கட்சி