இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கீழ்கண்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தின் முதல் கலந்தாய்வு இன்றைய தினம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நமது கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் அண்ணன் திரு. சே.பாக்கியராசன் அவர்கள் நமது பாசறையின் சென்ற ஆண்டிற்கான ஆண்டு மலர் -2019 ஐ வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இன்றைய தினம் நமது பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வும், எதிர்கால செயல்திட்ட விளக்கமும், உறுப்பினர்கள் கருத்துப்பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வும் மிகவும் ஆக்கபூர்வமாக நடந்து முடிந்தது.
இன்றைய கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.