வீரத்தமிழர் முன்னணி சார்பில் தஞ்சையில் விரைவில் நடைபெறவுள்ள அருண்மொழி சோழன்(ராச ராச சோழன்) பேரரசன் பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்த கலந்தாய்வு, அண்ணன் சீமானின் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் அன்னை அருள் திருமண அரங்கம், கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நமது பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நமது பிரிவு உறுப்பினர்களிடம் திரட்டப்பட்ட நிதி ரூ 25,000 /- நமது பிரிவின் சார்பில் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களிடம் நன்கொடையாக ஒப்படைக்கப்பட்டது.